Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது SSLV-D3 ராக்கெட் .. இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்..!

Siva
வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (11:20 IST)
SSLV-D3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.
 
இஸ்ரோ வடிவமைத்துள்ள இஎஸ்ஓ 08 என்ற செயற்கைக்கோள் பூமி கண்காணிப்புக்காக செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கை சுமந்தபடி SSLV-D3 என்ற ராக்கெட் சற்று முன்னர் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து திட்டமிட்டபடி விண்ணில் பாய்ந்தது.
 
பூமியிலிருந்து 475 கிலோ மீட்டர் உயரத்தில் குறைந்த புவி வட்ட சுற்று பாதையில் இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டுக்கான எரிபொருள் திட வகையை சேர்ந்தது என்றும் இந்த ராக்கெட்டில் 165 கிலோ கொண்ட மூன்று ஆராய்ச்சி கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் ஒவ்வொரு கருவியும் ஒவ்வொரு பயன்பாட்டிற்காக செயல்பட உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில் இஸ்ரோ வெற்றிகரமாக SSLV-D3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய நிலையில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி ஒழியும் வரை நமக்கு நாம் தான் பாதுகாப்பு! ஈபிஎஸ் காட்டம்..!

விஜய்க்கு நல்ல மனசு.. உதவி செய்யும் எண்ணம் இருக்கிறது: திருநாவுக்கரசர்

அதே 11A இருக்கையில் அமர்ந்ததால் நானும் உயிர் பிழைத்தேன்: பிரபல நடிகர்

மதுரை முருக பக்தர் மாநாட்டிற்கு உயர்நீதிமன்றம் பச்சைக்கொடி: ஆனால் சில நிபந்தனைகள்..!

தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: தமிழகத்தின் 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments