Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பதிலுக்கு பதில். நாகையில் மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் அதிரடி கைது

Advertiesment
, செவ்வாய், 7 மார்ச் 2017 (22:47 IST)
இன்று அதிகாலை தமிழக மீனவர் பிரிட்டோ இலங்கை கடற்படையின் அட்டூழிய துப்பாக்கி சூடு சம்பவத்தால் பலியான நிலையில் சற்று முன்னர்  நாகை அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.




மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்கள் எண்ணிக்கை குறித்து இன்னும் சரியான தகவல்கள் இல்லை என்றாலும் இலங்கை  மீனவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த கைது சம்பவம் தற்செயலாக நடந்ததா? அல்லது பதிலுக்கு பதில் நடவடிக்கையாக நடந்ததா? என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழக மீனவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் குறித்து, இலங்கை அதிபர் சிறிசேனாவிடம், இந்திய துணை குடியரசு தலைவர் ஹமித் அன்சாரி முறையீடு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு படிப்பு இல்லை! போலீசில் புகார் அளித்த வக்கீல்