Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீதேவியின் உடல் இன்று இந்தியா வரவில்லை! ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 26 பிப்ரவரி 2018 (22:10 IST)
கடந்த சனியன்று துபாயில் திடீரென மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று மாலைக்குள் இந்தியா கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

தடயவியல் சோதனை மற்றும் பிரேத பரிசோதனை முடிந்துவிட்டதால் துபாய் அரசின் வழக்கமான நடவடிக்கைகள் முடிவடைந்து ஸ்ரீதேவியின் உடல் எம்பார்மிங் செய்யப்பட்டு இன்று இந்தியாவுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால் திடீரென ஸ்ரீதேவியின் உடல் நாளை தான் எம்பார்மிங் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் அவரது உடல் நாளை தான் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என தெரிகிறது.

இந்த நிலையில் குளியல் தொட்டியில் மயங்கிய நிலையில் உயிரிழந்த ஸ்ரீதேவியின் மரணம் குறித்து போனிகபூர் உள்பட அவரது குடும்பத்தினர்களிடம் துபாய் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் துபாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments