Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகரஜோதி தரிசனம்.. ஸ்பாட் புக்கிங் நிறுத்தம்.. 40,000 பேருக்கும் மட்டும் அனுமதி: தேவஸ்தானம்

Mahendran
செவ்வாய், 9 ஜனவரி 2024 (10:25 IST)
சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு நாளையுடன் ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்படும் என்றும், மகரஜோதி நாளன்று 40,000 பேருக்கும் மட்டும் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என்றும் சபரிமலை தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
ஜனவரி 15ஆம் தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. இதனையொட்டி 14ஆம் தேதி 50,000 பக்தர்களுக்கு மட்டுமே சாமி தரிசனத்திற்கு அனுமதி என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 
 
மேலும் சபரிமலை மகரஜோதி தரிசனத்திற்கு ஸ்பாட் புக்கிங் முறை நிறுத்தப்பட்டுள்ளது. 40,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
 ஸ்பாட் புக்கிங் முறை நிறுத்தப்பட்டுள்ளதால், பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் முன்பதிவு ஜனவரி 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும்.  ஒரு நபருக்கு ஒரு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.
பக்தர்கள் தரிசனத்திற்கு செல்லும் போது, அடையாளச் சான்று மற்றும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments