Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன்: மக்களவை சபாநாயகர் அறிவிப்பால் எம்பிக்கள் அதிர்ச்சி..!

Webdunia
வியாழன், 3 ஆகஸ்ட் 2023 (10:13 IST)
நாடாளுமன்றத்திற்கு வரமாட்டேன் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா திடீரென அறிவித்துள்ளது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மணிப்பூர் விவகாரத்தை மையப்படுத்தி எதிர்க்கட் எம்பிகள் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் கண்ணியமாக நடந்து கொள்ளும் வரை அவைக்கு வரமாட்டேன் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்த தகவலை ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்பிகள் இடம் மக்களவை அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் எம்பிக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
 இருதரப்பு எம்பிக்கள் நடந்து கொண்ட விதத்தால் சபாநாயகர் ஓம்பிர்லா அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலின் எவ்வளவு முதலீடு கொண்டு வந்தார்? எல்.முருகன் கேள்வி

வெடித்து சிதறிய ரஷ்ய செயற்கைக்கோள்! விண்வெளியில் சிக்கிய சுனிதா வில்லியம்ஸ்! – விஞ்ஞானிகள் கவலை!

கள்ளச்சாராயம் குடிப்பதை நியாயப்டுத்துவதா? நீர்வளத் துறை அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments