Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காணாமல் போன விமானி அபிநந்தன் – தமிழகத்தை சேர்ந்தவரா ?

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2019 (17:16 IST)
பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய இந்திய விமானப்படையைச் சேர்ந்த காணாமல் போன விமானி தமிழகத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக இன்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த எதிர்தாக்குதலின் போது இந்தியாவைச் சேர்ந்த விமானி அபிநந்தன் என்பவர் காணாமல் போயுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது சம்மந்தமாக இந்திய விமானி பாகிஸ்தானிடம் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இன்னும் இந்திய அரசோ அல்லது பாகிஸ்தானிய அரசோ அதை உறுதிப்படுத்தவில்லை.

இந்நிலையில் இப்போது காணாமல் போன விமானி தமிழகததை சேர்ந்தவர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர்  சென்னை தாம்பரத்தைச் அபிநந்தன். என்றும் கூறப்படுகிறது. அவரது தந்தை, வர்த்தமானும் ராணுவத்தில் பணியாற்றியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் இது சம்மந்தமாக தமிழக அரசு சார்பிலோ அல்லது விமானியின் குடும்பத்தின் சார்பிலோ இதுவரை அதிகாரப்பூர்வமானத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments