Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்திரவாதி கூறிய பரிகாரம்.. 5 வயது சிறுமியை பலி கொடுத்த தம்பதி கைது..!

Mahendran
வெள்ளி, 7 மார்ச் 2025 (14:30 IST)
கோவாவில், ஒரு மந்திரவாதி கூறிய பரிகாரத்தின் பேரில், ஐந்து வயது சிறுமியை  கொலை செய்து ப்லி கொடுத்த தம்பதிகள் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கோவாவை சேர்ந்த பாபாசாகே அலார் என்பவர், தனது மனைவியுடன் பூஜாவுடன் சேர்ந்து ஒரு மந்திரவாதியிடம் தங்கள் துயரை போக்க வழி கேட்டுள்ளனர். மந்திரவாதி, சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
 
இதையடுத்து, அந்த தம்பதிகள் வசிக்கும் இடத்திற்கு அருகே, திடீரென ஐந்து வயது சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. வீட்டின் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் பரிசோதித்த போது, பாபாசாகே அலார் மற்றும் அவரது மனைவி பூஜா சிறுமியுடன் வீட்டை விட்டு வெளியே சென்றது தெரிய வந்தது.
 
அதன் பின்னர், அந்த தம்பதிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, "சிறுமியை பலியிட்டால் தங்களுடைய துயர பிரச்சனைக்கு தீர்வு காணலாம்" என மந்திரவாதி கூறியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். தங்கள் பிரச்சனைகள் தீர்வதற்காக, சிறுமியின் உடலை வீட்டின் பின்புறத்தில் பலியிட்டு புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
 
இதையடுத்து, அந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரு பெண்கள் முடியை பிடித்து இழுத்து சண்டை.! விசில் அடித்து உற்சாகப்படுத்திய ஆண்கள்..!

இந்தியாவில் முதல் டெஸ்லா காரை வாங்கிய அமைச்சர்.. மகனுக்கு பரிசளிப்பு..!

500 நிறுவனங்கள் நிராகரிப்பு.. மாதம் ரூ.20 லட்சத்தில் வேலை பெற்ற 23 வயது இளைஞர்..!

3வது பிரசவத்திற்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

இந்தியா மற்றும் ரஷ்யாவை இருள் சூழ்ந்த சீனாவிடம் இழந்துவிட்டோம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments