Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மந்திரவாதி கூறிய பரிகாரம்.. 5 வயது சிறுமியை பலி கொடுத்த தம்பதி கைது..!

Mahendran
வெள்ளி, 7 மார்ச் 2025 (14:30 IST)
கோவாவில், ஒரு மந்திரவாதி கூறிய பரிகாரத்தின் பேரில், ஐந்து வயது சிறுமியை  கொலை செய்து ப்லி கொடுத்த தம்பதிகள் குறித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
கோவாவை சேர்ந்த பாபாசாகே அலார் என்பவர், தனது மனைவியுடன் பூஜாவுடன் சேர்ந்து ஒரு மந்திரவாதியிடம் தங்கள் துயரை போக்க வழி கேட்டுள்ளனர். மந்திரவாதி, சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என கூறியதாக தெரிகிறது.
 
இதையடுத்து, அந்த தம்பதிகள் வசிக்கும் இடத்திற்கு அருகே, திடீரென ஐந்து வயது சிறுமி காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. வீட்டின் வெளியே இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் பரிசோதித்த போது, பாபாசாகே அலார் மற்றும் அவரது மனைவி பூஜா சிறுமியுடன் வீட்டை விட்டு வெளியே சென்றது தெரிய வந்தது.
 
அதன் பின்னர், அந்த தம்பதிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, "சிறுமியை பலியிட்டால் தங்களுடைய துயர பிரச்சனைக்கு தீர்வு காணலாம்" என மந்திரவாதி கூறியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். தங்கள் பிரச்சனைகள் தீர்வதற்காக, சிறுமியின் உடலை வீட்டின் பின்புறத்தில் பலியிட்டு புதைத்ததாகவும் வாக்குமூலம் அளித்தனர்.
 
இதையடுத்து, அந்த தம்பதிகள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்ற வழக்கில் தஷ்வந்த் விடுதலை! தமிழ்நாட்டை உலுக்கிய வழக்கில் பரபரப்பு தீர்ப்பு!

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்! இந்தியா அதிரடி..!

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய வீரர்.. 6 நாளாச்சு! எப்போ காப்பாத்துவீங்க?? - காங்கிரஸ் கேள்வி!

எதிர்த்து பேசியதால் மனைவியின் தலையை மொட்டையடித்த கணவன்.. போலீசில் புகார்

பாகிஸ்தான் எல்லைக்குள் தவறுதலாக சென்ற இந்திய பாதுகாப்புப் படை வீரர்.. 6 நாட்களாக மீட்க முடியவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments