Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடத்தப்பட்ட ராணுவ வீரரின் சடலம் கண்டுபிடிப்பு: பயங்கரவாதத்தின் கொடூரம்!

Siva
புதன், 9 அக்டோபர் 2024 (12:53 IST)
ஜம்மு-காஷ்மீரில் நேற்று இரவு நிகழ்ந்த பயங்கரவாத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்கு கடத்தப்பட்ட ஒரு ராணுவ வீரர் சடலமாக இன்று காலை மீட்கப்பட்டுள்ளார். 
 
நேற்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, தீவிர கண்காணிப்புப் பணியில் இருந்த ராணுவ வீரர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகினர்.
 
அனந்த்நாக் மாவட்டத்தின் வனப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இரண்டு வீரர்களை பயங்கரவாதிகள் நேற்று இரவில் கடத்திச் சென்றதாக தகவல் வந்தது. இதில், ஒரு வீரர் தப்பிக்க முடிந்தாலும், மற்றொருவர் மாயமாகியிருந்தார்.
 
தப்பிய வீரரின் உதவியுடன், ராணுவம் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை முதல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். முடிவாக, அனந்த்நாக் வனப்பகுதியில் துப்பாக்கி குண்டுகளைத் தாங்கிய வீரரின் சடலத்தை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
 
இந்த கொடூரச் சம்பவம் ராணுவத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், வீரரை கொன்று விட்ட பயங்கரவாதிகளை பிடிக்கும் பணியில் பாதுகாப்புப் படைகள் தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் பருவமழை முன்னெச்சரிக்கை: 1,000 இடங்களில் மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ரெப்போ விகிதம் குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட ரிசர்வ் வங்கி; சாமானிய மக்களுக்கு சுமை..!

முதல்வர் வேட்பாளர் யாராக இருந்தாலும் ஏற்க தயார்: உத்தவ் தாக்கரே அறிவிப்பு..!

2 ராணுவ வீரர்களை கடத்திய பயங்கரவாதிகள்! தேர்தல் முடிவு நாளில் காஷ்மீரில் பயங்கரம்..!

ஈஷாவில் கோலாகலமாக நடைப்பெற்று வரும் நவராத்திரி திருவிழா! ஆராவாரத்துடன் நடைபெற்ற ஆதிவாசி நடன நிகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments