Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களுக்கு பீதி காட்டிய பாம்பு: கண்ணூர் வாக்கு பதிவில் களோபரம்

Webdunia
செவ்வாய், 23 ஏப்ரல் 2019 (15:03 IST)
நாடாளுமன்ற தேர்தல் 3 ஆவது கட்ட வாக்குப்பதிவை அடுத்து இன்று கேரளாவில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்கு பதிவின் போது ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்ததால் அங்கு பரபர்ப்பு ஏற்பட்டது. 
 
கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. இன்று காலை முதல் கேரள மாநிலம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 
 
இந்நிலையில் கண்ணூர் தொகுதிக்கு உட்பட்ட மயில் கண்டகை நகரில் உள்ள ஒரு வாக்குப்பதிவு மையத்தில் வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பாம்பு இருந்துள்ளது. வாக்கு ஒப்புகைச் சீட்டு எந்திரம் ஆடிக்கொண்டே இருந்துள்ளது. 
 
அப்போது எதர்ச்சியாக் வாக்காளர் ஒருவர் அதில் இருக்கும் பாம்பை கண்டு கூச்சலிட உடனே வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களும், தேர்தல் அதிகாரிகளும் தெறித்து ஓடினர். பின்னர் போலீஸார் வந்த அந்த பாம்பு வெளியே எடுத்து காட்டுப்பகுதியில் விட்டனர். 
 
இதனால், சிறிது நேரம் களோபரமான அந்த வாக்கு சாவடி பின்னர் வழக்கமான பணிகளை துவங்கியது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

சென்னையில் திடீரென இடி மின்னலுடன் மழை: வாகன ஓட்டிகள் ஜாக்கிரதை..!

எங்களுக்கு ஏர்டெல், ஜியோவே போதும்.. தலைசுற்றும் ஸ்டார்லிங்க் கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments