Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வயநாட்டிலும் ராகுல்காந்தியை துரத்தும் ஸ்மிருதி இரானி! காங்கிரஸ் அதிர்ச்சி

Webdunia
வெள்ளி, 19 ஏப்ரல் 2019 (22:29 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, உத்தரபிரதேச மாநிலத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். அந்த தொகுதியில் பாஜக, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை வேட்பாளராக அறிவித்ததும், ராகுல்காந்தியின் வெற்றி கேள்விக்குறியானதாக கூறப்பட்டது.
 
இதனையடுத்து ராகுல்காந்தி, கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்தார். அமேதியில் தோல்வி கிடைக்கும் என்று பயந்தே ராகுல்காந்தி வயநாட்டில் போட்டியிடுவதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன
 
இந்த நிலையில் 3வது கட்ட தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கேரள மாநில வயநாடு தொகுதியும் ஒன்று. இங்கு தேர்தல் பிரச்சாரம் நாளை மாலையுடன் முடிவடைவதை அடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் வயநாடு தொகுதிக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்தல் பிரச்சாரம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ராகுல்காந்தி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை தோற்கடிக்க பிரச்சாரம் செய்வேன் என்று ஸ்மிருதி இரானி கூறி வருவதால் காங்கிரஸ் அதிரச்சி அடைந்துள்ளது. இந்த நிலையில் வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி டேரா போட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

சிற்றுண்டி சாப்பிட்ட 30 மாணவிகளுக்கு உடல்நலக்குறைவு: பட்டுக்கோட்டையில் பரபரப்பு..!

நிலத்தை அபகரித்துக் கொண்டு மிரட்டுகிறார்கள்! திமுகவை சேர்ந்த வழக்கறிஞர் மீது புகார்!

இது ஆரம்பம்தான்.. இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்..? - போயிங் குறைபாடு குறித்து எச்சரித்த பொறியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments