நேற்று முதல் அந்தமானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (08:25 IST)
நேற்று மதியம் முதல் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
நேற்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள சில பகுதிகளில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளுக்கு செல்ல பயந்து கொண்டு வெளியிலேயே நிற்பதாகவும் கூறப்படுகிறது.
 
இன்று அதிகாலை 2.26 மணிக்கு அந்தமானில் உள்ள பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 4.6  என்று பதிவானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
4.6, 4.9, 4.1, 5.3, 3.9, 5.5 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments