Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேற்று முதல் அந்தமானில் அடுத்தடுத்து 6 முறை நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (08:25 IST)
நேற்று மதியம் முதல் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
நேற்று அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள சில பகுதிகளில் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளுக்கு செல்ல பயந்து கொண்டு வெளியிலேயே நிற்பதாகவும் கூறப்படுகிறது.
 
இன்று அதிகாலை 2.26 மணிக்கு அந்தமானில் உள்ள பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து இந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவுகோல் 4.6  என்று பதிவானதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
4.6, 4.9, 4.1, 5.3, 3.9, 5.5 என்ற ரிக்டர் அளவில் அடுத்தடுத்து ஆறுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்று கூறப்படுகிறது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments