Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த ஊருக்கு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களால் கொரோனா பாதிப்பு அதிகமா? அதிர்ச்சி தகவல்

Webdunia
புதன், 10 ஜூன் 2020 (20:02 IST)
நாடு முழுவதிலும் உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு கடந்த சில நாட்களாக திரும்பிக் கொண்டிருந்த நிலையில் அவ்வாறு திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களால் 6 மாநிலங்களில் கொரோனா வைரஸின் பாதிப்பு மிக அதிகமாக வந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
கொரோனா வைரஸ் மிக அதிகமாக பரவி வந்ததன் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் நடந்தே அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கு சென்றனர். இந்த நிலையில் உத்திரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் இருந்து பிற மாநிலங்கள் சென்ற தொழிலாளர்கள் மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் அந்த மாநிலங்களில் கொரோனா நோய் பாதிப்பு மிக அதிகமாக அதிகரித்து வருவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது
 
இந்த ஆறு மாநிலங்களிலும் கடந்த மே மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட தற்போது எட்டு மடங்கு அதிகரித்து உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பரிசோதனை செய்ய ஆறு மாநில அரசுகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments