Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸ் கிடைத்தால் பட்னாவிஸ் வாயில் போடுவேன்! – சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Webdunia
திங்கள், 19 ஏப்ரல் 2021 (16:47 IST)
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துள்ள நிலையில் மருந்தை பதுக்கிய நிறுவனத்தை விசாரிப்பதை எதிர்ப்பதாக பட்னாவிஸ் மீது சிவசேனா உள்ளிட்ட ஆளும் கட்சிகள் விமர்சனம் வைத்துள்ளன.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தடுப்பு மருந்துகளை பதுக்கி வைப்பது சட்டப்படி பெரும் குற்றமாகும். இந்நிலையில் ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கியதாக மருந்து நிறுவன உயர் அதிகாரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரை மும்பை போலீஸார் விசாரிப்பதற்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள சிவசேன எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் “இந்த கொரோனா நெருக்கடி காலத்தில் பட்னாவிஸ் முதல்வராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். மாநில அரசுகளுக்கு ஆதரவு தருவதை விட அவர்களிடம் குற்றம் கண்டுபிடிக்கவே பாஜகவினர் விரும்புகின்றனர். எனக்கு மட்டும் கொரோனா வைரஸ் கிடைத்தால் அதை பட்னாவிஸ் வாயில் போட்டு விடுவேன்” என பேசியுள்ளார்.

சிவசேனா எம்.எல்.ஏவின் இந்த சர்ச்சை கருத்தை தொடர்ந்து பட்னாவிஸ் ஆதரவாளர்கள் கெய்க்வாட்டிற்கு எதிராக பேசி வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments