Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்க 162 பேர் இருக்கோம்; எங்களுக்குதான் ஆட்சி! – எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பு

Webdunia
திங்கள், 25 நவம்பர் 2019 (19:51 IST)
மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமையும் என்பது குறித்து நாளை தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில் எம்.எல்.ஏக்கள் அணிவகுப்பை நடத்தியுள்ளது சிவசேனா கூட்டணி.

மகாராஷ்டிராவில் சிவசேனா கூட்டணி கட்சிகள் ஆட்சியமைக்க திட்டமிட்டு வந்த நிலையில் திடீரென பாஜக ஆட்சியமைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசியவாத காங்கிரஸ் அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு பாஜகவில் சேர்ந்து கொண்டு துணை முதல்வர் பதவியை பெற்றார்.

இது சட்டத்திற்கு முரணானது, ஆளுனர் ஒற்றை சார்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கிறார் என சிவசேனா நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்தது. மனு மீதான விசாரணை நேற்று விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் அதன் தீர்ப்பு நாளை வெளியாக இருக்கிறது.

நாளை தீர்ப்பு வெளியாக இருக்கும் நிலையில் தங்களது பெரும்பான்மையை மக்களுக்கு காட்டும் வகையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து தங்கள் எம்.எல்.ஏக்கள் 162 பேரை கொண்டு ஒரு அணிவகுப்பை நடத்தியுள்ளது. மும்பை தனியார் ஹோட்டலில் இந்த அணிவகுப்பு நடந்தது. அதில் “நாங்கள் 162 பேர்” என்கிற பலகையும் இடம் பெற்றிருந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

காதலருடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. குழந்தைகளும் பங்கேற்பு..!

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. 44 சுற்றுலா பயணிகளின் கதி என்ன?

பொதுச்செயலாளர் பதவியில் இருந்து ஈபிஎஸ் விலக வேண்டும்.. இல்லையென்றால்.. ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் தீ விபத்து: சிக்னல் பாதிப்பு என தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments