Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் நள்ளிரவில் டாக்சியில் பயணிக்க வேண்டாம்: சிங்கப்பூர் பெண் நெட்டிசன்..!

Mahendran
புதன், 11 செப்டம்பர் 2024 (12:11 IST)
சிங்கப்பூரை சேர்ந்த பிரபல வலைப்பதிவர் தனது சமூக வலைத்தளத்தில் டெல்லியில் நள்ளிரவில்   டாக்ஸியில் பயணம் செய்ய வேண்டாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியில் மூன்று முக்கியமான விஷயங்களை தவிர்க்க வேண்டும் என்று கூறிய அவர் முதலாவதாக நள்ளிரவில் டாக்ஸியை அழைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார். டெல்லியில் தான் நள்ளிரவில் டாக்ஸியில் சென்றபோது டிரைவர் கூடுதலாக பணம் கேட்டதாகவும் அதை கொடுக்க மறுத்த போது தவறான இடத்தில் வேண்டுமென்றே இறக்கிவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது ஆக செல்போன் எண்ணை டாக்சி டிரைவரிடம் கொடுக்க வேண்டாம் என்று பரிந்துரை செய்துள்ளார். டெல்லியில் பயணம் செய்த போது தனது செல்போன் எண்ணை டாக்சி டிரைவரிடம் கொடுத்தபோது சில சிக்கல்களை சந்தித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

இறுதியாக பணத்துக்கு பதிலாக கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் பரிந்துரை செய்துள்ளார். சிறிய கடைகளில் குறிப்பாக தெருவோர கடைகளில் பணம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்றும் அவர் இந்த யோசனையை தெரிவித்துள்ளார்.

து குறித்து அவர் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ 20 லட்சம் பார்வையாளர்களுக்கும் அதிகமாக பார்த்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments