Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிக்னல் குறைபாடு: 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டதா?

சிக்னல் குறைபாடு: 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டதா?
, ஞாயிறு, 4 ஜூன் 2023 (08:39 IST)
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து சிக்னல் குறைபாடு காரணமாக ஏற்பட்டது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் சிக்னல் குறைபாடு குறித்து மூன்று மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
ரயில்வே சிக்னல் பயன்பாட்டில் பெரிய குறைகள் இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை விடப்பட்டதாகவும் இந்திய ரயில்வேக்கு தென்மேற்கு ரயில்வேயின் தலைமை செயல்பாட்டு மேலாளர் கடந்த பிப்ரவரி மாதமே இது குறித்து கடிதம் எழுதி எச்சரித்து இருந்தாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 
 
இந்த எச்சரிக்கை தெரிந்தவுடன் உடனடியாக இந்த சிக்னலை சரி செய்ய இந்திய ரயில்வே முயற்சி செய்திருந்தால் இந்த விபத்தை நடந்து இருக்காது என்றும் இந்த தொழில்நுட்ப வளர்ச்சி காலத்திலும் சிக்னல் குறைபாடு என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்த போது முதலில் கிரீன் சிக்னல் தோன்றி அதன் பிறகு ரயில் கடந்த கொண்டு இருந்தபோதே ரெட் சிக்னல் மாறியதாகவும், இதனால் தான் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரவோடு இரவாக அகற்றப்பட்ட ரயில் பெட்டிகள்! – இயல்பு நிலைக்கு திரும்பும் ஒடிசா ரயில் நிலையம்!