மோடிக்கு வாக்கு சேகரித்த சித்தராமையா - கர்நாடகாவில் சலசலப்பு

Webdunia
புதன், 9 மே 2018 (09:09 IST)
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, அவர் மோடியை ஆதரித்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவில் வரும் 12 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக கர்நாடக ஆளும் கட்சியான காங்கிரஸ் சார்பில் தலைவர் ராகுல் காந்தியும்,  பாஜக சார்பில் பிரதமர் மோடியும் பல்வேறு இடங்களில் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில் நேற்று கர்நாடகா மாநிலம்  மாண்டியா மாவட்டத்தில் மாளவல்லி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நரேந்திர சுவாமியை ஆதரித்து முதலமைச்சர் சித்தராமையா பிரசாரம் செய்தார்.
 
அப்போது பேசுகையில், சித்தராமையா தவறுதலாக அனைத்து கிராமங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டதற்கு நாங்களும், நரேந்திர மோடியுமே காரணம் என்றார்.
இதனைக்கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக வேட்பாளர் நரேந்திர சுவாமி, சித்தராமையாவின் பேச்சில் குறிக்கிட்டார். பிறகு சித்தராமையா தனது தவறை திருத்திக் கொண்டு பேச ஆரம்பித்தார். சித்தராமையா பாஜகவை ஆதரித்து பேசியதால், அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments