Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய சித்தராமையா.. நாளை பதவியேற்பு..!

கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய சித்தராமையா.. நாளை பதவியேற்பு..!
, வெள்ளி, 19 மே 2023 (08:03 IST)
கர்நாடக மாநில முதல்வராக பதவி ஏற்கவிருக்கும் சித்தராமையா நேற்று கர்நாடக ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதை அடுத்து நாளை பெங்களூரில் பிரம்மாண்டமாக பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. 
 
சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பம் இருந்த நிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாக சித்தராமையா முதல்வராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்த சித்தராமையா ஆட்சி அமைக்க உரிமை கூறினார் அப்போது டி கே சிவகுமார் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
நாளை பெங்களூரில் சித்தராமையா அரசு பதவி ஏற்கும் நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உள்பட ஆறு மாநில முதல்வர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த சைனா போன் வெடித்து சிதறல்.. உயிர் தப்பிய முதியவர்..!