Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10 ரூபாய்க்கு உணவளிக்கும் சிவ போஜன் திட்டம்! – மராட்டியத்தில் அறிமுகம்!

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (11:25 IST)
மகாராஷ்டிராவில் பத்து ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர தேர்தலின்போது மக்களுக்கு குறைந்த விலையில் உணவளிக்கும் உணவகங்களை அரசே செயல்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கூட்டணி கட்சிகள் துணையோடு ஆட்சி அமைத்திருக்கும் சிவசேனா கட்சி அந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசின் மதிய உணவு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டன. சிவ போஜன் என்றழைக்கப்படும் இந்த உணவகங்களில் ரூபாய் 10க்கு உணவளிக்க இருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் 2 சப்பாத்தி, சாதம், பருப்பு மற்றும் காய்கறி கூட்டு 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

காலை 12 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் இந்த சிவ போஜன் உணவகங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் நல்ல உணவு கிடைக்கும். இந்த திட்டத்தை மகாராஷ்டிர மக்கள் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments