10 ரூபாய்க்கு உணவளிக்கும் சிவ போஜன் திட்டம்! – மராட்டியத்தில் அறிமுகம்!

Webdunia
திங்கள், 27 ஜனவரி 2020 (11:25 IST)
மகாராஷ்டிராவில் பத்து ரூபாய்க்கு மதிய உணவு அளிக்கும் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர தேர்தலின்போது மக்களுக்கு குறைந்த விலையில் உணவளிக்கும் உணவகங்களை அரசே செயல்படுத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது கூட்டணி கட்சிகள் துணையோடு ஆட்சி அமைத்திருக்கும் சிவசேனா கட்சி அந்த திட்டத்தை தொடங்கியுள்ளது.

குடியரசு தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் பல இடங்களில் அரசின் மதிய உணவு விடுதிகள் திறந்து வைக்கப்பட்டன. சிவ போஜன் என்றழைக்கப்படும் இந்த உணவகங்களில் ரூபாய் 10க்கு உணவளிக்க இருக்கிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் 2 சப்பாத்தி, சாதம், பருப்பு மற்றும் காய்கறி கூட்டு 10 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

காலை 12 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படும் இந்த சிவ போஜன் உணவகங்கள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் நல்ல உணவு கிடைக்கும். இந்த திட்டத்தை மகாராஷ்டிர மக்கள் வரவேற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் லோயர்பர்த் இவர்களுக்கு மட்டும் தான்: இந்தியன் ரயில்வே முக்கிய அறிவிப்பு..!

இன்னும் 140 நாட்களில் திமுக ஆட்சி முடிந்துவிடும்: நயினார் நாகேந்திரன்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கேட்ட கனடா பிரதமர் மார்க் கார்னி.. என்ன காரணம்?

இந்தியும் ஆங்கிலமும் தாய்மொழியை பலவீனப்படுத்துகிறது: சித்தராமையா குற்றஞ்சாட்டு..!

மணமகளின் அப்பாவுடன் ஓடிப்போன மணமகனின் தாய்.. காதலிப்பதாக காவல் நிலையத்தில் வாக்குமூலம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments