Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துப்பாக்கி முனையில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ; அதிர்ச்சி சம்பவம்!

துப்பாக்கி முனையில் பெண் காவலரை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ; அதிர்ச்சி சம்பவம்!

Siva

, வியாழன், 20 ஜூன் 2024 (15:16 IST)
தெலுங்கானா மாநிலத்தில் துப்பாக்கி முனையில் பெண் காவலரை எஸ்ஐ ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்திருக்கும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள காளேஸ்வரம் என்ற காவல் நிலையத்தில் பவானிசென்  காவல்துறை எஸ்.ஐ. ஆக பணிபுரிந்தார். அவர் அதே காவல் நிலையத்தில் பணிபுரிந்த பெண் தலைமை காவலரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 
 துப்பாக்கி முனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுவதோடு இதை வெளியில் கூறினால் கடுமையாக விளைவுகள் சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்ததாகவும் தெரிகிறது.
 
இதனை அடுத்து பவானிசென் குற்றம் உறுதியானதால் அவர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் அவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே அவர் மூன்று பெண் காவலர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் இருந்த நிலையில் தற்போது அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.! சென்னை வானிலை மையம் தகவல்..!!