Webdunia - Bharat's app for daily news and videos

Install App

17 ஆண்டுகளாக பெண்ணின் வயிற்றில் இருந்த கத்தரிக்கோல்.. டாக்டரின் கவனக்குறைவால் சோகம்..!

Mahendran
சனி, 29 மார்ச் 2025 (09:46 IST)
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணின் வயிற்றில் 17 ஆண்டுகளுக்கு முன் டாக்டர் கவனக்குறைவால் வைத்த கத்திரிக்கோல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், 2008 ஆம் ஆண்டு சந்தியா என்ற பெண்ணுக்கு குழந்தை பிறந்த நிலையில், அவருக்கு சிசேரியன் மூலம் பிரசவம் செய்யப்பட்டது. அதன் பின், பல ஆண்டுகளாக வயிற்றுவலி பிரச்சினை இருந்து வந்த நிலையில், அவ்வப்போது மருத்துவரிடம் மருந்து மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார்.
 
இந்த நிலையில், சமீபத்தில் சந்தியாவுக்கு வயிற்றுவலி அதிகமாகியதால், எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது வயிற்றில் கத்திரிக்கோல் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து கத்திரிக்கோலை அகற்றினர்.
 
இது குறித்து சந்தியாவின் கணவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். 17 ஆண்டுகளுக்கு முன் தனது மனைவிக்கு பிரசவம் செய்த டாக்டர்  கவனக் குறைவால் கத்திரிக்கோலை வயிற்றில் விட்டுவிட்டார் என்றும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments