Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்ஜினியரிங் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. டிரைவரை தேடும் காவல்துறையினர்..!

Mahendran
வெள்ளி, 17 ஜனவரி 2025 (11:55 IST)
தெலுங்கானா மாநிலத்தில், இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவி ஒருவர் தனியார் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில், அவரை டிரைவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அந்த டிரைவரை போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் இப்ராஹிம் பட்டினம் என்ற பகுதியில் இயங்கி வரும் இன்ஜினியரிங் கல்லூரியில் 19 வயது மாணவி ஒருவர் படித்து வருகிறார். வழக்கம் போல, தனது தங்கும் அறையில் தூங்கி கொண்டிருந்த அவர், கதவு தட்டும் சத்தம் கேட்டது. தன்னுடன் தங்கியிருக்கும் மற்றொரு மாணவி தான் வந்திருப்பார் என்று நினைத்து கதவை திறந்தார்.

அப்போது, திடீரென உள்ளே வந்த நபர் கதவை உள்புறமாக பூட்டி, அந்த மாணவியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனை அடுத்து, கதறி அழுத மாணவி காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மாணவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விசாரணையில், இந்த சம்பவத்திற்கு டிரைவரே காரணம் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து, தலைமறைவாகியுள்ள அந்த டிரைவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பகுதியின் கல்லூரி வளாகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

தமிழக அரசு மதுக்கடைகளை மூட வேண்டும். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்.. திருமாவளவன்

சிபில் ஸ்கோர் சரியாக இல்லை என்றால் வேலை கிடையாது: நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்