Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நம்பிக்கை வாக்கெடுப்பு - சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனு!

நம்பிக்கை வாக்கெடுப்பு - சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனு!
, புதன், 29 ஜூன் 2022 (10:43 IST)
ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. 

 
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது என்பதும் சிவசேனா கட்சி நிர்வாகிகள் திடீரென ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வருவது தெரிந்ததே. இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்கு மகாராஷ்டிர முதல்வர் உத்தவ்தேவ் தாக்கரே தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் பகத் சிங் கொஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். 
 
நாளை நடைபெறும் சிறப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் அசாம் உள்பட ஒருசில மாநிலங்களில் தங்கியிருக்கும் எம்எல்ஏக்கள் நாளை மகாராஷ்டிரா திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் ஆளுநரின் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவுக்கு எதிராக சிவசேனா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது. சிவசேனா கட்சியின் கொறடா சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். 16 எம்.எல்.ஏ. தகுதி நீக்க விவகாரம் உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலையில் ஆளுநர் ஆணை சட்டவிரோதம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்துக்கு கொரோனா! – பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்வாரா?