Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சனை தீர்ந்தது வாருங்கள்: சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்த சிம்லா ஹோட்டல்கள்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (13:39 IST)
சிம்லாவில் தண்ணீர் பிரச்சனை முடிந்துவிட்டது வாருங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு வட இந்திய ஹோட்டல் ரெஸ்டாரண்ட் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 
சிம்லாவில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சனையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மூலம் வருமானம் ஈட்டும் டாக்ஸி ஓட்டுநர்கள், ஹோட்டல்கள் உள்ளிடவை கடுமையாக பாதிகப்பட்டன.
 
தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி நேரடியாக தலையிட்டு தீர்த்து வைத்தனர். சிம்லா மாநகராட்சி அட்டவணைப் போட்டு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு 42 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. 
 
இந்நிலையில் வட இந்திய ஹோட்டல் ரெஸ்டாரண்ட் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து சிம்லாவில் தண்ணீர் பிரச்சனை முடிந்துவிட்டது. இப்போது சிம்லாவில் நிலவும் ரம்மியமான சூழலைக் காண சுற்றுலா பயணிகள் சிம்லாவுக்கு வர வேண்டும் என ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அடுத்த கட்டுரையில்
Show comments