Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சனை தீர்ந்தது வாருங்கள்: சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்த சிம்லா ஹோட்டல்கள்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (13:39 IST)
சிம்லாவில் தண்ணீர் பிரச்சனை முடிந்துவிட்டது வாருங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு வட இந்திய ஹோட்டல் ரெஸ்டாரண்ட் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

 
சிம்லாவில் ஏற்பட்ட தண்ணீர் பிரச்சனையால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் மூலம் வருமானம் ஈட்டும் டாக்ஸி ஓட்டுநர்கள், ஹோட்டல்கள் உள்ளிடவை கடுமையாக பாதிகப்பட்டன.
 
தண்ணீர் தட்டுப்பாடு பிரச்சனையில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதி நேரடியாக தலையிட்டு தீர்த்து வைத்தனர். சிம்லா மாநகராட்சி அட்டவணைப் போட்டு தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு 42 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. 
 
இந்நிலையில் வட இந்திய ஹோட்டல் ரெஸ்டாரண்ட் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்து சிம்லாவில் தண்ணீர் பிரச்சனை முடிந்துவிட்டது. இப்போது சிம்லாவில் நிலவும் ரம்மியமான சூழலைக் காண சுற்றுலா பயணிகள் சிம்லாவுக்கு வர வேண்டும் என ஊடகங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments