Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்களுக்கு கை தட்டி நன்றி சொல்லுங்கள் - பிரதமர் மோடி

Webdunia
வியாழன், 19 மார்ச் 2020 (20:52 IST)
மருத்துவர்களுக்கு கை தட்டி நன்றி சொல்லுங்கள் - பிரதமர் மோடி
 

கொரோனா வைரஸை மக்கள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என  பிரதமர் நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது, மார்ச் 22 ல் மாலை 5க்குள் வீட்டின் நுழைவாயிலில் நின்று மருத்துவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். பணிக்கு வரவில்லை ஊதியத்தை குறைக்காதீர்.22 ஆம் தேதி கொரோனா வைரஸூக்கு எதிரான சோதனை ஓட்டமாக இருக்கும்.மருத்துவர்களுக்கு கைத்தட்டல்கள்,மணியோசை எழுப்பி உங்கள் நன்றியை வெளிப்படுத்துங்கள் என கேட்டுக்கொண்டார்.
 
கொரோனாவொடு போராடிக் கொண்டிருக்கும் மருத்துவ சேவைக்கு மேலும் அதிக பளுவை ஏற்றக்கூடாது. அதிலும் மருத்துவமனைகளில் குவிந்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம். இந்தக் கொரானா இந்தியாவை பாதிக்காது என நினைப்பது தவறு என தெரிவித்துள்ளார்.
 
கொரோனாவை தடுக்க உறுதி மற்றும் கட்டுப்பாடு மிக முக்கியமான தேவையாக உள்ளது. இந்தியர்கள் மிகுந்த மன தைரியத்துடன் கொரோனாவைரஸை எதிர்கொள்ள வேண்டும்.
 
அறுவை சிகிச்சைகாக நேரம் தேர்வு செய்திருந்தால் அதை தள்ளிப்போடுவது சிறப்பாக இருக்கும். இந்த கொரோனா வைரஸ் உலகப் போர் போல பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கொரோனா வைரஸால் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டால் அதை தவிர்க்க குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments