Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பலமுறை பாலியல் பலாத்காரம்.. பாஜக எம்பி மகன் மீது பெண் புகார்..!

Siva
திங்கள், 21 ஜூலை 2025 (08:00 IST)
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பிரபு சவுகானின் மகன் பிரதீக் சவுகான் மீது, திருமண நிச்சயதார்த்தத்திற்கு பின் பாலியல் பலாத்காரம் செய்ததாக  ஒரு பெண் புகார் அளித்துள்ளார். இந்தப் புகார் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது:
 
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனக்கும் பிரதீக் சவுகானுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு, திருமண வாக்குறுதியின் அடிப்படையில் பிரதீக் தன்னை தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
 
பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் உள்ள தனியார் ஹோட்டல்களில் தன்னை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். பாலியல் உறவுக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால் திருமணத்தை நிறுத்தி விடுவேன் என்று மிரட்டியதாகவும், தன்னை கட்டாயப்படுத்தி பலமுறை வலுக்கட்டாயமாகப் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தனது புகாரில் அவர் விரிவாக கூறியுள்ளார்.
 
இந்த சூழ்நிலையில், திருமண தேதியை இறுதி செய்வதற்காக பிரதீக் சவுகானின் வீட்டிற்கு அந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் சென்றுள்ளனர். அப்போது, "உங்கள் மகளை நாங்கள் திருமணம் செய்ய மாட்டோம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்" என்று கூறி அவர்களை மிரட்டி திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.
 
இந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஆடி காா்த்திகை விரதம்: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. குவிந்த பக்தர்கள்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. சென்னை உள்பட 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

சேலத்தில் தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்: தேதி அறிவிப்பு..!

தீர்ப்புகள் தயாரிக்க AI தொழில்நுட்பம் பயன்படுத்தலாமா? கேரள உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

துணை முதல்வர் நயினார் நாகேந்திரன்.. மேடையில் அறிவித்த பெண் பாஜக தொண்டரால் சலசலப்பு..!

அடுத்த கட்டுரையில்