Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழகாக இருப்பதால் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்படுகிறேன்; திருநங்கையின் புலம்பல்

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (11:10 IST)
டெல்லியைச் சேர்ந்த பவானி என்ற திருநங்கை வாழ்க்கையில் தான் அன்றாடம் அனுபவிக்கும் துன்பங்களை வருத்தத்துடன் கூறியுள்ளார்.
திருநங்கைகள் கேலியுடன் அழைக்கப்பட்டு சமூகத்தில் ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ வாழ முடியாமல் மன உளைச்சலுடன் சமூக மதிப்பு எதுவுமில்லாமல் தனிப்பட்ட சமுதாயமாக எந்தத் தொழிலும் செய்ய முடியாமல் கேளிக்கை நடனம் மற்றும் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தப்பட்டு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாமல் அவலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பொதுவாகத் தமது குடும்பச் சூழலை விட்டு விலகி, திருநங்கைகள் எனும் குழுமத்தில் கலந்து விடுகிறார்கள். 
 
டெல்லியைச் சேர்ந்த மகாமங்கலேஷ்வர் பவானி என்ற திருநங்கை கின்னர் அகதா என்ற ஆன்மீக இயக்கத்தில் உறுப்பினராக உள்ளார். சிறுவயதிலிருந்து சமூகத்தில் பல்வேறு சவால்கள் மற்றும் இன்னல்களை சந்தித்தே இன்று தன்னம்பிக்கை மனிதராக இருக்கும் பவானி நேயத்தை பரப்பும் கொள்கை கொண்ட இயக்கத்தில் பணியாற்றுகிறார்.  எனது குடும்பம் பெரியது என்பதால் சாப்பாட்டிற்கு கடுமையாக கஷ்டப்பட்டிருக்கிறோம். எனது 10 வது வயதில் தான் திருநங்கை என்பதை உணர்ந்த பின்பு, கேளிக்கு உள்ளானேன். பள்ளியில் கிண்டலுக்கு உள்ளானதால் படிப்பை நிறுத்தினேன். 13 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன்.
 
மேலும் தான் அழக்காக இருந்ததால் பல பாலியல் பிரச்சனைகளுக்கு ஆளானேன், பல பிரச்சனைகளுக்கு நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன், அதனால் மனம் தளரப்போவதில்லை, தனது நற்பணிகளை தொடர்ந்து செய்வேன் என்று அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்