Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குத்துச் சண்டை வீரரைப் போல் பெண்ணை புரட்டி எடுத்த வியாபாரி - ஆத்தாடி என்னா அடிங்குற

குத்துச் சண்டை வீரரைப் போல் பெண்ணை புரட்டி எடுத்த வியாபாரி - ஆத்தாடி என்னா அடிங்குற
, திங்கள், 18 ஜூன் 2018 (11:18 IST)
மத்திய பிரதேசத்தில் தொழில் போட்டியின் காரணமாக பூ  வியாபாரிகளுக்குள் குத்துச் சண்டை வீரர்களைக் போல மோதல் ஏற்பட்டது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் உள்ள மகாகாளேஸ்வரர் கோவில் அருகே உள்ள இரு பூக்கடை வியாபாரிகளுக்கிடையே தொழில் போட்டி இருந்து வந்துள்ளது. இதனால் இரு தரப்பினரிடையேயும் அடிக்கடி சண்டை இருந்து வந்துள்ளது.
 
இந்நிலையில் வழக்கம் போல் நேற்றும் சண்டை நடைபெற்றது. ஒரு கட்டத்தில் வாய்த் தகராறு கைக்கலப்பாக மாறியது. ஆண் பெண் பேதமின்றி ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
 
அதில் ஒரு நபர் பெண்கள் என்றும் பாராமல் அவரை கடுமையாக தாக்குகிறார். குத்துச்சண்டை வீரர்களைப் போல பெண்களை அடித்தார். இதனை தடுக்காமல் சுற்றி நின்ற மக்கள் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தனர். மேலும் அந்த காட்சிகளை தங்களது செல்போனில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சொகுசு வாழ்க்கை வாழ்ந்தால் சிறைதான் - பிக்பாஸ் வீட்டில் யாரை கூறினார் கமல்ஹாசன்?