Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லாரி கவிழ்ந்து விழுந்த விபத்தில் 17 பேர் பரிதாப பலி

லாரி கவிழ்ந்து விழுந்த விபத்தில் 17 பேர் பரிதாப பலி
, செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (11:25 IST)
மகாராஷ்டிரா மாநிலம் கந்தாலா பகுதியில் சாலையோர தடுப்பில் லாரி மோதியதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
லாரிகளில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கும் போதிலும், மக்கள் பலர் சட்டத்தை மதிக்காமல் லாரிகளில் அபாயகரமான பயணம் மேற்கொள்கின்றனர். அப்படி பயணம் செய்யும் போது விபத்து ஏற்பட்டு, சிலர் பரிதாபமாக உயிரிழக்கின்றனர்.
 
இந்நிலையில் கட்டிட தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு மகாராஷ்டிரா மாநிலம் சதாரா - புனே நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை மினிலாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர தடுப்பில் பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் 17 பேர் சம்பவ இடத்திலே பலியாகியுள்ளனர்.
webdunia
விஷயமறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், ஈடிபாடுகளில் சிக்கிய 15 பேரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவர் என்னுடன் வலுக்கட்டாயமாக உறவு வைத்தார் - நடிகை ஸ்ரீ ரெட்டி புகார்