Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு எதிராக செயல்பட்ட பெண் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை. பெரும் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (22:28 IST)
நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் பொறுப்பேற்றதில் இருந்தே கருத்து சுதந்திரங்கள் ஒடுக்கப்படுவதாக கூறப்படும் நிலையில் பாஜக மற்றும் இந்துத்துவத்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்த பிரபல பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் இன்று பெங்களூரில் உள்ள தனது வீட்டில் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் பத்திரிகையாளர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 
 
குஜராத் படுகொலை குறித்த விரிவான ஆவணப்படம் ஒன்றை கன்னட மொழியில் வெளியிட்ட லங்கேஷுக்கு அவ்வப்போது கொலை மிரட்டல் வருவது வாடிக்கை. இந்த நிலையில் இன்று பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் கதவைத் தட்டியுள்ளனர். கதவை தட்டுவது யார் என்று அவர் கதவைத்திறந்த பார்க்க முற்பட்டபோது திடீரென அவர்கள் துப்பாக்கியால் லங்கேஷை சுட்டு விட்டு தப்பியோடிவிட்டனர்.  துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் கவுரி லங்கேஷ் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.
 
இந்த சம்பவம் குறித்து பெங்களூரு போலிசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான விபத்து.. மெடிக்கல் கல்லூரியில் தாய், மகளின் உடலை தேடி அலையும் இளைஞர்.. கண்ணீர் பேட்டி..!

நூற்றுக்கணக்கான ட்ரோன்களை ஏவிய ஈரான்.. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி..!

விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனடி இழப்பீட்டு தொகை: எல்.ஐ.சி அறிவிப்பு..!

ஒரு வாரத்திற்கு முன் அம்மா மரணம்.. நேற்று விமான விபத்தில் அப்பா மரணம்.. லண்டனில் தவிக்கும் மகள்கள்..!

விமான விபத்தில் பலியான நர்ஸை விமர்சித்த தாசில்தார்.. சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments