Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் ரத்து

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கான செமஸ்டர் தேர்வுகளும் ரத்து
, சனி, 11 ஜூலை 2020 (15:32 IST)
சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு பரவிவரும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 7 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிகப்பட்டுள்ளனர். டெல்லி மாநில அரசு அனைத்துப் பல்கலைக் கழக பருவத் தேர்வுகளும், இறுதியாண்டுத் தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

கொரொனா வைரஸ்  வேகமாகப் பரவிவருவதை அடுத்து, நாட்டில் உள்ள அனைத்துப் பல்கலை மற்றும் கல்லூரித் தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இனி எப்போது தேர்வுகள் நடைபெறும் என்ற அனைவரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், சமீபத்தில் பல்கலைக் கழக தேர்வுகள் மற்றும் கல்லூரி இறுதிப் பருவத் தேர்வுகள் நடைபெறும் என யுஜிசி அறிவித்து வழிகாட்டி  நெறுமுறைகள வெளியிட்டது.

இந்த நிலையில் டெல்லியில் வரும் செப்டம்பர் மாதம் பல்கலைக் கழகங்களுக்கான தேர்வை நடத்தும் திட்டம்  இல்லை எனவும் அதற்கான சூழலு, இல்லை என அம்மாநில துணை முதல்வர் மணீஸ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கல்லூரி இறுதி ஆண்டில் முடித்த மாணவர்களுக்கு வேலை கிடைத்திருந்தால் அதில் இணைந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே மாதத்தில் ரூ.15.80 கோடி காணிக்கை: கல்லா கட்டிய ஏழுமலையான்!!