Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூப் பார்த்து பள்ளிச்சிறுவன் தயாரித்த மதுவை குடித்த நண்பனுக்கு நேர்த அதிர்ச்சி சம்பவம்

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (12:12 IST)
யூடியூப் பார்த்து மது தயாரித்த பள்ளிச் சிறுவனின் மதுவை குடித்த அவரது நண்பர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கேரளாவைச் சேர்ந்த 12 வயது சிறுவன் திராட்சை பழத்தை வாங்கி யூடியூபில் பார்த்து மது தயாரிக்க முயற்சித்துள்ளார்.  அவ்வாறு தயாரித்த மதுவை சில நாட்கள் பூமிக்குள் புதைத்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது.
 
அதன் பின்னர் சில நாட்கள் கழித்து மண்ணில் புதைத்து வைத்த பாட்டிலை எடுத்து பள்ளிக்கு சென்று தனது நண்பனுக்கு குடிக்க கொடுத்துள்ளார். அதை குடித்த அவரது நண்பன் சிறிது நேரத்திலேயே வாந்தி எடுத்து மயங்கி விழ உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 
 
இதுகுறித்து பள்ளி சிறுவனிடம் போலீசார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் விசாரித்தபோதுதான் யூடியூப் பார்த்து மது தயாரித்ததாகவும் அந்த மதுவை நண்பனுக்கு குடிக்க கொடுக்க கொடுத்ததாகவும் கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து அந்த சிறுவனின் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments