புருஷனை வைத்துக்கொண்டு விதவைக்கான பென்ஷன் வாங்கும் பெண்கள்

Webdunia
சனி, 17 நவம்பர் 2018 (12:16 IST)
உத்திரபிரதேசத்தில் கணவர் உயிரோடு இருக்கும்போதே சில பெண்கள் விதவைக்கான நல்வாழ்வு உதவித்தொகையை பெற்று வருகின்றனர்.
கணவரை இழந்து வாழும் பெண்களுக்கு அரசு உதவித் தொகை வழங்கி வருகிறது.
 
உத்தரபிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்தீப் குமார். இவரது மனைவியில் செல்போனிற்கு, உங்கள் அக்கவுண்டிற்கு 3000 தொகை வந்துள்ளதாக மெசேஜ் வந்துள்ளது.
 
இதனால் குழப்பமடைந்த அவர் இதுகுறித்து வங்கியில் விசாரித்தபோது, இது விதவைகளுக்கான பென்ஷன் தொகை என அதிகாரிகள் கூறியுள்ளனர். புருஷன் தாம் உயிரோடு இருக்கும்போதே இந்த தொகை எப்படி வந்தது என அவர் கேட்டுள்ளார்.
 
பிறகு தான் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியது. கிட்டதட்ட அதே கிராமத்தை சேர்ந்த 22 பெண்கள் விதவைத்தொகையை தவறாக பெற்றுவருவது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments