Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த SBI வங்கி !.

குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த SBI வங்கி !.
, சனி, 28 மார்ச் 2020 (15:19 IST)
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்த SBI வங்கி !.

வங்கிகளுக்கான வட்டிவிகிதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்தத்தை அடுத்து, இன்று இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான ரிசர்வ் வங்கிக் கடன்களுக்காக வட்டி விகிதத்தை  குறைத்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும்  ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனவே, நேற்று, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது அவர் பல சலுகைகளை மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அறிவித்திருந்தார். அப்போது பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம் எனத் தெரிவித்தார்.


அப்போது, சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ள சலுகைகள்

 
  • மூன்று மாதங்களுக்கு எந்தவிதமான மாதத்தவணைகளும் கட்டத் தேவையில்லை
  • மேலும் தனியார் வங்கிகளுக்கு வழங்கப்படும் ரெப்போ வட்டிவிகிதம் 5.1 ல் இருந்து 4.4 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 75 புள்ளிகள் குறைக்கட்டது. வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெரும் கடனுக்காக வட்டி விகிதம் 90 புள்ளிகள் குறைத்து  4 சதவீதம் இருக்கும் என்று தெரிவித்தார்.
  • வாகனங்களுக்கான கடன் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.
  • ரெப்போ வட்டிக் குறைந்ததால் மாதத்தவணை தொகை குறைய வாய்ப்பு என தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய வங்கியான SBI , வங்கிக் கடன்களுக்காக வட்டி விகிதத்தை  குறைத்துள்ளது. அதில், வீட்டுக்கடன்கள் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கான வட்டிவிகிதம்  75 அடிப்படைகள் குறைக்கப்பட்டுள்ளது. எனவே, கடன் விகிதமானது 7.80 சதவீதத்தில் இருந்து 7.05 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அதேசமயம் எஸ்.பி.ஐயின் ரெப்போ வட்டி விகிதத்தை அடிப்படையாகக் கொண்டு வட்டி விதிக்கும் திட்டத்தில், 7.40 சதவீதத்தில் இருந்து 6.65 சதவீதமாக குறாஉக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ வங்கியில் சுமார் 30 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுககான வட்டி 7.20 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அறிவிக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஊரடங்கு உத்தரவை மீறிய…8,796 பேர் ஜாமீனில் விடுவிப்பு !