Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியில் என்னால் மாற்றத்தை கொண்டு வர முடியும்: சசிதரூர்

Webdunia
ஞாயிறு, 2 அக்டோபர் 2022 (16:28 IST)
நான் காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டால் என்னால் காங்கிரஸ் கட்சியில் மாற்றத்தை கொண்டு வரமுடியும் என காங்கிரஸ் கட்சியை தேர்தலில் போட்டியிடும் சசிதரூர் கூறியுள்ளார். 
 
காங்கிரஸ் கட்சி தேர்தல் வரும் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெற உள்ளது என்பதும் இதற்கான வேட்புமனு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே. இந்த தேர்தலில் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர்ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர்.
 
இந்த  நிலையில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய சசிதரூர் நானும் மல்லிகாஜூர்னே கார்கே அவர்களும் ஒருவருக்கு எதிரி அல்ல என்றும் இது போர் அல்ல என்றும் கட்சியின் எதிர்காலத்திற்கான போட்டி என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மல்லிகாஜூர்னே அவர்கள் காங்கிரஸ் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் அவரால் மாற்றத்தை கொண்டு வர முடியாது என்றும் ஏற்கனவே இருக்கும் நடைமுறையைத் தான் தொடருவார் என்றும் ஆனால் நான் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மாற்றத்தை கொண்டு வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் சோனியாகாந்தி ஆதரவு சசிதரூருக்கு இல்லை என்று கூறப்படுகிறது.
 

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments