Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

துணை சபாநாயகர் தம்பிதுரை மீது உரிமை மீறல் புகார்: சசிகலா புஷ்பா மிரட்டல்!

துணை சபாநாயகர் தம்பிதுரை மீது உரிமை மீறல் புகார்: சசிகலா புஷ்பா மிரட்டல்!

துணை சபாநாயகர் தம்பிதுரை மீது உரிமை மீறல் புகார்: சசிகலா புஷ்பா மிரட்டல்!
, சனி, 22 அக்டோபர் 2016 (16:19 IST)
மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மீது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது உரிமை மீறல் குழுவிடம் புகார் அளிக்க உள்ளதாக அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.


 
 
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா புஷ்பா, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் உரிமை மீறல் குழுவிடம் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரைக்கு எதிராக புகார் அளிக்க உள்ளேன். பெண்ணாக, எம்பியாக என்னிடம் தம்பிதுரை முறையாக நடந்து கொள்ளவில்லை.
 
அவர் என்னை கைதி போல நடத்தியதால் உரிமை மீறல் புகார் தெரிவிப்பேன் என கூறியுள்ளார். டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவாவை கண்ணத்தில் அறைந்த விவகாரத்தில் ஜெயலலிதாவிடம் சசிகலா புஷ்பாவை அழைத்து சென்ற தம்பிதுரை மிகவும் கெடுபிடியாக நடந்து கொண்டதாக ஏற்கனவே சசிகலா புஷ்பா பேட்டியளித்திருந்தார்.
 
இந்நிலையில் தற்போது மக்களவை துணை சபாநாயகர் மீது உரிமை மீறல் குழுவிடம் புகார் அளிக்க இருப்பதாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டவுட் கிளியர் பண்ண வந்த பெண்ணை பலாத்காரம் செய்த மாணவர்கள்!