Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக சிறைத்துறைக்கு நன்கொடை கொடுத்த சசிகலா !

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (15:44 IST)
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அமைக்கப்படவுள்ள சமுதாய வானொலிக்கு சசிகலா நன்கொடை அளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார். அவருக்கு இதுவரை இரண்டு முறை பரொல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா உருவான நவம்பர் 1 ஆம் தேதி அவர் நன்னடத்தைக் காரணமாக விடுவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின.

ஆனால் நன்னடத்தை விதிகள் அவருக்குப் பொருந்தாது என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர் இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் ஆரம்பிக்க இருக்கும் சமுதாய வானொலிக்காக சிறைக்கைதிகள் அனைவரிடமும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. வானொலிக்காக சசிகலாவும் கணிசமான ஒரு தொகையை அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments