Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக சிறைத்துறைக்கு நன்கொடை கொடுத்த சசிகலா !

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (15:44 IST)
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அமைக்கப்படவுள்ள சமுதாய வானொலிக்கு சசிகலா நன்கொடை அளித்துள்ளார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கியுள்ள சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் உள்ளார். அவருக்கு இதுவரை இரண்டு முறை பரொல் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா உருவான நவம்பர் 1 ஆம் தேதி அவர் நன்னடத்தைக் காரணமாக விடுவிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகின.

ஆனால் நன்னடத்தை விதிகள் அவருக்குப் பொருந்தாது என சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவர் இருக்கும் பரப்பன அக்ரஹார சிறையில் ஆரம்பிக்க இருக்கும் சமுதாய வானொலிக்காக சிறைக்கைதிகள் அனைவரிடமும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. வானொலிக்காக சசிகலாவும் கணிசமான ஒரு தொகையை அளித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments