Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடி பேசுனதை முழுசா கேட்கலை! – தானாக மன்னிப்பு கேட்ட சசி தரூர்!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (10:29 IST)
வங்கதேசத்தில் பிரஹமர் மோடி பேசியது குறித்து கிண்டலாக ட்வீட் செய்திருந்த சசி தரூர் தற்போது தானாக முன் வந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.

வங்க தேசத்தின் 50வது சுதந்திர தின விழாவில் இந்திய பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் வங்க தேச விடுதலைக்காக போராடிய இந்திய ராணுவத்திற்கு மரியாதை செலுத்துவதாக கூறியதுடன், தன்னுடைய 22வது வயதில் வங்க தேச விடுதலைக்காக சத்தியாகிரக போராட்டத்தில் தான் ஈடுபட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சை கிண்டலடித்து பதிவிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் “பிரதமர் மோடி இந்திய போலி செய்திகளை வங்காளத்தில் சொல்கிறார். வங்க தேசத்திற்கு சுதந்திரம் வாங்கி தந்தவர் யார் என்பது எல்லாருக்கும் தெரியும்” என கூறியிருந்தார்.

வங்க தேசத்திற்கு சுதந்திரம் பெற்று தர முக்கிய காரணமாக இருந்த அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி பற்றி பிரதமர் மோடி குறிப்பிடவில்லை என்ற அர்த்ததில் சசி தரூர் அப்படி பேசியிருந்தார். ஆனால் அன்றைய நிகழ்வில் பிரதமர் மோடி இந்திரா காந்தி குறித்தும் பேசியிருந்தார்.

இதை பின்னர் அறிந்துக் கொண்ட சசிதரூர், பிரதமர் உரையை முழுவதுமாக கேட்காமல் கிண்டலாக பதிவிட்டதாகவும், தனது செயலுக்கு மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments