Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளில், சானிட்டரி நாப்கின் விற்பனை இயந்திரம் கட்டாயமாக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு..!

Webdunia
புதன், 17 மே 2023 (17:37 IST)
பள்ளிகளில் சானிட்டரி நாப்கின் இயந்திரம் கட்டாயமாகப்படும் என கேரள முதல்வர் பினராக விஜயன் அவர்கள் அறிவித்துள்ளார். 
 
கேரளாவில் உள்ள கல்லூரி மாணவிகளுக்கு மாதவிலக்கு தினத்தன்று விடுமுறை என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது கேரளாவில் உள்ள பள்ளிகளில் சானிடரி நாப்கின் இயந்திரம் வைக்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். 
 
அதேபோல் பள்ளிகளில் நாப்கின் அகற்றும் முறை உறுதி செய்யப்படும் என்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பள்ளிகளில் இந்த வசதியை பள்ளிக்கல்வித்துறை வழங்கும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் குப்பையில்லா கேரளா என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும் பெண்கள் அதிக நம்பிக்கை உடன் வளர வேண்டும் என்றும் மாதவிடாய் ஒரு பாவம் என்று புனையப்பட்ட பொது அறிவு வெல்லட்டும் என்றும் அவர் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments