Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேரளாவை உலுக்கிய காட்டுயானை! – படமாகிறது ‘அரிக்கொம்பன்’!

Advertiesment
Arikomban
, திங்கள், 15 மே 2023 (13:01 IST)
கடந்த 5 ஆண்டுகளாக கேரளாவை குலை நடுங்க செய்த காட்டு யானையான அரிக்கொம்பனின் கதையை மலையாளத்தில் படமாக எடுக்க உள்ளார்கள்.

கேரளாவில் கடந்த 5 ஆண்டு காலமாக இடுக்கி மாவட்டத்தின் கேரள – தமிழக எல்லை கிராமங்களை அச்சுறுத்தி வந்த ஒற்றை காட்டு யானை அரிக்கொம்பன் (அரிசி கொம்பன்). சின்னக்கனல், சந்தனபாறை உள்ளிட்ட பல பகுதிகளில் புகுந்து வீடுகளை, விளை நிலங்களை சூறையாடிய அரிக்கொம்பன் இதுவரை 20 பேரை கொன்றுள்ளது. சமீபத்தில் தேனி மாவட்ட வன எல்லைக்குள் புகுந்த அரிக்கொம்பன் ஒரு ரேசன் கடையை துவம்சம் செய்தது.

இந்த அரிக்கொம்பன் யானையைன் கதையை மையப்படுத்தி ‘அரிக்கொம்பன்’ என்ற பெயரிலேயே மலையாளத்தில் ஒரு படம் எடுக்க இருக்கிறார்கள். சஜித் யாஹியா இயக்கும் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளதுடன், இலங்கையில் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி அவதூறு வழக்கு..!