Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் சனாதனம்.! உதயநிதிக்கு தெலுங்கானா முதல்வர் கண்டனம்..!!

Senthil Velan
சனி, 20 ஏப்ரல் 2024 (12:08 IST)
சனாதானம் குறித்து தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு தெலுங்கானா முதல்வர்  ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி,  கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா மற்றும் கொரோனாவை ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்த சனாதனம் என்று பேசினார். இது பெரும் சர்ச்சை ஏற்படுத்திய நிலையில், நீதிமன்றமும் உதயநிதிக்கு அறிவுரை வழங்கியிருந்தது. 
 
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, உதயநிதி ஸ்டாலினின் கருத்து தவறானது என்றும் அது அவருடயை சிந்தனை, சனாதனம் குறித்த கருத்திற்காக அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர்  தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த கருத்தை ‛இந்தியா’ கூட்டணி கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

ALSO READ: எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீர் ரத்து..! என்ன காரணம் தெரியுமா..?
 
சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் கட்சி  உடன்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments