Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளா வெள்ளம்: கோடிகளை கொட்டி குவிக்கும் ஹோண்டா, சாம்சங் நிறுவனங்கள்

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (07:23 IST)
கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தில் இருந்து அம்மாநில மக்களுக்கு உதவி செய்ய பல்வேறு நிறுவனங்கள், மாநில அரசுகள், மத்திய அரசு, வெளிநாட்டு தனிநபர்கள், திரையுலகினர் என கோடிக்கணக்கில் நிதியுதவிகள் செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் இந்தியாவில் தொழில் செய்து வரும் வெளிநாட்டு நிறுவனங்களான ஹோண்டா, சாம்சங் உள்பட பல நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நிதியுதவி செய்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இதன்படி ஹோண்டா நிறுவனம் ரூ.3 கோடி நிதியுதவி செய்துள்ளது. அதேபோல், சாம்சங் நிறுவனம் ரூ.1.5 கோடியும் கேரளாவுக்கு நிதியுதவி செய்துள்ளது மட்டுமின்றி முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கு ஆயிரம் படுக்கைகள் மற்றும் போர்வைகளை சாம்சங் இந்தியா நிறுவனம் வழங்கியுள்ளது.
 
அதேபோல் கேரளாவிற்கு அதானி அறக்கட்டளை சார்பாக ரூ.50 கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ள அதானி அறக்கட்டளை நேற்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments