Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன்.. ஜார்க்கண்ட் அரசியலில் பரபரப்பு..!

Siva
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (19:01 IST)
ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் பாஜகவில் இணைய போவதாக கடந்த சில நாட்களாக செய்தி வெளியான நிலையில் சற்றுமுன் அவர் பாஜகவில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

கடந்த ஜனவரி மாதம் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் ஜூன் மாதம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து மீண்டும் அவர் முதல்வரான நிலையில் சம்பாய் சோரன் பதவி விலகினார்.

அதன் பிறகு சில அதிருப்தி காரணமாக பாஜகவில் சம்பாய் சோரன் இணைய போவதாக கூறப்பட்ட நிலையில் சற்றுமுன் அவர் பாஜகவில் இணைந்துள்ளார். இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இதனால் ஜார்கண்ட் மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளிகளில் அதிகரித்த பாலியல் குற்றச்சாட்டு! ஆசிரியர்கள் உட்பட 23 பேர் பணி நீக்கம்!

ஏஐ துறையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள்.. ஆய்வில் ஆச்சரிய தகவல்..!

மறுமணத்திற்கு தடையாக இருந்த மகன்.. சுட்டு கொலை செய்த 76 வயது தந்தை..!

தமிழ் பெயர் பலகை இல்லா கடைகள்! உரிமத்தை ரத்து செய்ய முடிவு? - சென்னை மாநகராட்சி அதிரடி!

அரசு பேருந்துகளில் கட்டணமின்றி லக்கேஜ் எடுத்துச் செல்லலாம்.. மகளிர்களுக்கு முதல்வர் சலுகை..!

அடுத்த கட்டுரையில்
Show comments