Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமாஜ்வாதி - காங்கிரஸ் தொகுதி பங்கீடு நிறைவு..! காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கீடு.!!

Senthil Velan
புதன், 21 பிப்ரவரி 2024 (15:49 IST)
மக்களவைத் தேர்தலில் உத்திரபிரதேசத்தில் சமாஜ்வாதி காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடைந்துள்ளது. சமாஜ்வாதி 62 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மக்களவை தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
 
மூன்றாவது முறையாக வெற்றி பெற்று மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அதேபோல் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டுள்ள இந்தியா கூட்டணி, வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த தீவிரம் காட்டி வருகின்றது. 
 
இந்நிலையில் 80 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது.

பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடைந்த நிலையில்,  62 தொகுதிகளில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு 17 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள.

ALSO READ: தென்கொரியாவில் பயிற்சி மருத்துவர்கள் ராஜினாமா..! சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் பாதிப்பு.!!
 
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கட்சி இடையே ஏற்பட்டுள்ள தொகுதி உடன்பாடு முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேனியில் டெங்கு காய்ச்சலால் மாணவன் உயிரிழப்பு! - மேலும் 5 சிறுவர்கள் சிகிச்சையில்..!

சென்னை மழையில் மக்கள் தத்தளிப்பு: பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் திமுக! - ஓபிஎஸ் விமர்சனம்!

ஏரியில் ப்ளீச்சிங் பவுடருக்கு பதிலாக வெள்ளை நிற மாவை தூவியதாக குற்றசாட்டு: நடவடிக்கை எடுக்கப்படும் என -அமைச்சர் தாமோ.அன்பரசன் பதில்!

தருமபுரம் ஆதீன மடாதிபதி உள்ளிட்ட பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்....

திருப்பதியில் விடிய விடிய மழை: ஏழுமலையான் கோயில் முன்பு வெள்ளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments