Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுகளை திரும்ப பெற முடியாது – சாகித்ய அகாடெமி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 11 டிசம்பர் 2020 (11:25 IST)
விவசாயிகளுக்கு ஆதரவாக சாகித்ய அகாடெமி விருதுகளை சில எழுத்தாளர்கள் திருப்பி அளித்து வருகின்றனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாக எழுத்தாளர்கள் தாங்கள் பெற்ற சாகித்ய அகாடமி விருதுகளை திரும்ப ஒப்படைக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

இது கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. எழுத்தாளர்கள் பல்வேறு காரணங்களுக்காக இது போல சாகித்ய அகாடெமி விருதை திரும்ப அளிப்பதாக அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் சாகித்ய அகாடெமி விருதை திரும்ப பெறுவது நடைமுறையில் இல்லை என சாகித்ய அகாடெமி அறிவித்துள்ளது. இதனால் எழுத்தாளர்கள் அளித்த விருதுகள் அவர்களிடம் திருப்பி அளிக்க தயாராக உள்ளதாகவும், அவர்கள் அளித்த விருதுப் பணத்தையும் வங்கி கணக்கில் செலுத்தாமல் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது சம்மந்தமாக தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments