Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவின் பாதுகாப்பு குறித்து ரஷ்ய அதிபர் புதின் கூறியது என்ன?

Webdunia
திங்கள், 4 மார்ச் 2019 (08:30 IST)
ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவும் என்று புதின் தெரிவித்து உள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது தெரிவித்துள்ளார்.

தூத்துகுடியில் நடந்த துப்பாக்கி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்று பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:

அடுத்த 70 ஆண்டுகளுக்கு ராணுவ தளவாடங்களை ரஷ்யாவின் கூட்டோடு இந்தியாவில் உற்பத்தி செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது. ஏ.கே.203 ரக தொழிற்சாலையால் நாட்டின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்படும்

தொழிற்சாலை மூலம் தயார் செய்யப்படும் முதல் 7 லட்சம் ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் நமது நாட்டு பயன்பாட்டுக்கு வைத்துக்கொள்ளப்படும். அதன்பின் தயாரிக்கப்படும் துப்பாக்கிகள் பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று கூறிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், 'ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் கடிதத்தை படித்துக் காட்டினார். அதில், ஏ.கே.203 ரக துப்பாக்கிகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு உதவும் என்று புதின் தெரிவித்து இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

சூடான கல்லில் 10 வினாடி உட்கார்ந்த மூதாட்டி.. அறுவை சிகிச்சை செய்யும் அளவுக்கு விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments