Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன் – இந்தியா வருகை எப்போது ?

இந்திய தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டார் அபிநந்தன் – இந்தியா வருகை எப்போது ?
, வெள்ளி, 1 மார்ச் 2019 (12:50 IST)
பாகிஸ்தான் வசம் இருந்த இந்திய விமானி அபிநந்தன் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி நடந்த புல்வாமாத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் இந்தியா எல்லைத் தாண்டி பாகிஸ்தானின் பாலகோட் எனும் பகுதியில் நடத்தியது. அந்தத் தாக்குதலுக்குப் பதிலடிக் கொடுக்கும் விதமாக நேற்று பாகிஸ்தான் விமானங்கள் எல்லைத் தாண்டி இந்தியாவில் தாக்குதல் நடத்த முயன்றுள்ளது. ஆனால் இந்திய விமானப்படை அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளது. அதில் ஒரு விமானம் தவிர மற்ற இரண்டு விமானங்களும் தப்பி சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலின் போது இந்திய விமானி அபிநந்தன் வர்தமான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக்கொண்டார்.

பாகிஸ்தானிடம் இருந்து அபிநந்தனை மீட்க இந்திய அரசு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் மற்றும் உலக நாடுகளான அமெரிக்கா மற்றும் ஜெர்மன் மூலமாக பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுத்தது. பல்வேறு அழுத்தங்களை அடுத்து நல்லெண்ண அடிப்படையிலும் விமானி அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் அரசு ஒத்துக்கொண்டுள்ளதாக தகவல்கள் காலையில் வெளியாகியாகின. அதையடுத்து இன்று  அவர் விடுவிக்கப்படுவார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நேற்று தெரிவித்தார். பாகிஸ்தான் அரசு அபிநந்தனை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து சற்று முன்னர் விமானி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் மாலை 3 மணியளவில் அவர் இந்திய எல்லையை வந்தடைவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்திய மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகிஸ்தானில் இந்திய வான் தாக்குதல் நடத்தியதை இந்த புகைப்படங்கள் உறுதி செய்கின்றனவா?