Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த வாரம் இந்தியா வரும் ரஷ்யாவின் ஸ்பூட்னிக்!!

Webdunia
திங்கள், 16 நவம்பர் 2020 (08:33 IST)
ஸ்பூட்னிக் வி மருந்து பரிசோதனைக்காக  அடுத்த வாரம் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. 
 
உலகையே முடுக்கியுள்ள கொரோனா வைரஸுக்கு ரஷியா ஸ்புட்னிக்-5 என்ற தடுப்பூசியை உருவாக்கியது. இந்த தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கிற 3-வது இறுதிக்கட்ட மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது. 
 
இந்த சோதனையின்போது 31 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்கப்பட்டது. இதற்கு மத்தியில், கொரோனா பாதிப்புக்கு ஆளாகாமல் தடுப்பதற்கு மக்கள் பயன்பாட்டுக்காக இந்த தடுப்பூசியின் வினியோகம் தொடங்கி உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இந்த ஸ்பூட்னிக் வி-யின் 2 மற்றும் 3வது கட்ட மருத்துவ பரிசோதனை நடத்துவதற்கு இந்தியாவை தலைமையிடமாக உருவாக்க உள்ளதாக கூறப்பட்டது. அதன் படி தற்போது இந்த மருந்து பரிசோதனைக்காக  அடுத்த வாரம் இந்தியா கொண்டுவரப்பட உள்ளது. 
 
இந்த மருந்திற்கான உற்பத்தி உரிமையை பெற்றுள்ள டாக்டர் ரெட்டி’ஸ் ஆய்வக நிறுவனம் பரிசோதனைக்கான அனுமதியை பெற்றுவிட்டது. கான்பூரில் உள்ள கணேஷ் சங்கர் வித்யார்த்தி மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு வரப்படும் தடுப்பூசி தன்னார்வலர்களுக்கு உட்படுத்தப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே.. அனல் பறந்த விஜய் பேச்சு..!

இன்று பகல் 1 மணிக்கு பாங்காக்கில் பயங்கர நிலநடுக்கம்: அவசரநிலை பிரகடனம்

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

2026ல் திமுக, தவெக இடையேதான் போட்டி: விஜய் பேச்சுக்கு அதிமுக தலைவர்களின் ரியாக்சன்..!

செல்வப்பெருந்தகையின் மாபெரும் ஊழல்.. திமுக அரசும் உடந்தையா? அண்ணாமலை கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments